நிதி அன்பளிப்பு

அன்பான இடைக்காடு வாழ் மக்கள் மற்றும் புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும்
இடைக்காடு நம்பிக்கை நிதியத்தின் செயற்பாடுகளிற்காக எமது ஊர் புலம்பெயர் குடும்பங்களை சேர்ந்த பத்து நலன்விரும்பிகள் தலா 1000 Canadian dollar (இலங்கை ரூபா.114,000/=) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
மேற்படி ரூபா.1,140,000/= (ரூபா. பதினொரு இலட்சத்து நாற்பதினாயிரம்) நிதியினை எமது நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது நிதியத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்பளிப்பு செய்தோர் விபரம்:
- Toronto, Canada : 06
- Montrial, Canada : 03
- Australia : 01
இவ்வாறான நிதிப்பங்களிப்பினை எமது ஊர் மற்றும் புலம்பெயர் நலன்விரும்மிகளிடம் இருந்து கிடைக்கப்பெறும் பட்சத்தில் நிதியத்தின் செயற்பாடுகளை சிறப்பான முறையில் முன்னெடுத்து செல்ல முடியும்.
எமது நிதிய செயற்றிட்டங்கள் மற்றும் தற்போதய செயற்பாடுகள் பற்றிய விபரங்களை எதிர்வரும் வாரங்களில் அறியத்தரப்படும்.
அனைவரது ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் வேண்டிநிற்கின்றோம்.
ஒன்றுபடுவோம் ! உழைப்போம் ! உயர்வோம் !